எனக்கு ஆசை அதிகம்!! -சுருதிஹாசனின் வெளிப்படை பேச்சு-

ஆசிரியர் - Editor III
எனக்கு ஆசை அதிகம்!! -சுருதிஹாசனின் வெளிப்படை பேச்சு-

வாழ்க்கையில் எல்லா விடயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக் கொண்ட அனுபவங்களின்படி நிதானமாக வாழ்வில் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

எனக்கு தென்னிந்திய படங்களில் நடிக்கத்தான் ஆர்வம். இந்திக்கு வர விருப்பமில்லை என்று சிலர் பேசுகின்றனர். அதில் உண்மை இல்லை. எல்லா மொழி படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது. 

இந்தி படங்களில் நடிக்கவில்லை என்பதால் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றோ இந்தி படங்களை விட்டு விட்டேன் என்றோ அர்த்தம் இல்லை. வேறு மொழிகளில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். 

அவ்வளவுதான். வாழ்க்கையில் எல்லா விடயங்களையும் கற்றுக்கொண்டு நிதானமாக பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது முடிவு. எனக்கு ஆசைகள் அதிகம். 

இன்னும் புதிது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. என்னை இன்னும் மெருகேற்றும் முயற்சிகள் செய்கிறேன். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றுதான் மனதில் தோன்றுகிறது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு