வவுனியா - பொியமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஒருவர் தப்பி ஓட்டம்..! தேடுதல் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
வவுனியா - பொியமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஒருவர் தப்பி ஓட்டம்..! தேடுதல் தீவிரம்..

வெளிநாட்டிலிருந்து வருகைதந்திருந்த நிலையில் வவுனியா - பொியமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று இரவு தப்பி ஓடியிருக்கின்றார். 

விடயம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த 36 வயதுடய சிலாபம் - மாதம்பை பகுதியைச் சேர்ந்த விஜித்தறுவான் குணவர்த்தன என்பவரே தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். 

குறித்த விமானத்தில் அழைத்து வரப்பட்ட பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனைகளுக்காக குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும், 

குறித்த நபரை கைது செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும், குறித்த நபரின் பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் குறித்த பெரியகாடு இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனையில் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு