வடமாகாண பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டது..! தரம் 2 தொடக்கம் 10 வரையான மாணவர்களுக்கு வலய மட்டத்தில்..

ஆசிரியர் - Editor I

வடமாகாண கல்வி திணைக்களத்தின் தீர்மானத்திற்கமைக 2ம் தவணை பரீட்சைகள் 02.10. 2020 – 09.10.2020 காலப்பகுதியில் நடாத்தப்பட உள்ளது. 

தரம் 2 இலிருந்து தரம் 10 வரைக்குமான இப்பரீட்சை வலய மட்டத்தில் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் தற்போதைய நிலையை அறிவதற்கும் அவர்களை கற்றலில் உற்சாகப்படுத்தலுக்கும் ஏற்ற வகையில் 

வினாத்தாள்கள் தயாரிக்க திட்டமிடப்படுகின்றன. தரம் 11 ற்கு வினாத்தாள்கள் மாகாண மட்ட பொதுப்பரீட்சையாக திட்டமிடப்பட்டு வினாத்தாள்களும், 

புள்ளித்திட்டங்களும் மென்பிரதிகளாக வலயங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு