சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்..! கடந்தகாலத்தில் அது நடந்தது, சீ.விக்னேஸ்ரவுக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்..! கடந்தகாலத்தில் அது நடந்தது, சீ.விக்னேஸ்ரவுக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை..

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். என்பது விக்னேஸ்வரனுக்கு நினைவில் இருக்கவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் எச்சரித்திருக்கின்றார். 

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும். நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது 

என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை என தெரிவித்துள்ளார். உங்களிடம் உள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்,

இந்த நாட்டில் சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்,மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு