நித்திரை குளிசை கொடுத்து, கழுத்தை நொித்து, நீரில் தலையை அமுக்கி கொலை செய்தோம்..! பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்..

ஆசிரியர் - Editor I

மன்னார் உப்பளத்தில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்.நெடுந்தீவை சேர்ந்த இளம் பெண்ணின் கொலையில் பிரதான சந்தேக நபராக கூறப்படும் பெண்ணின் மாமன் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இந்நிலையில் மாமன் வழங்கிய வாக்குமூலத்தில் நித்திரை குளிசைகளை சாப்பாட்டில் கலந்து கொடுத்து உப்பளத்திற்கு கொண்டு சென்று அங்கு கழுத்தை நொித்து, தலையை நீரில் அமுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

மன்னார் உப்பளத்திலிருந்து கடந்த 14ம் திகதி யாழ்.நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜீயின் (வயது 21) என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் பெண்ணின் சகோதரி உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், 

பிரதான சந்தேகநபராக கூறப்பட்ட பெண்ணின் மாமனார் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு வவுனியாவில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் வழங்கிய வாக்குமூலத்திலேயே நித்திரை குளிசைகளை கொடுத்து உப்பளத்திற்கு கொண்டு சென்று அங்கு கழுத்தை நொித்தும், நீரில் அமுக்கியும் கொலை செய்ததைாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு