தகுதியான பட்டதாரிகளை மீளிணைக்க நடவடிக்கை..! நியமனம் நிராகரிக்கப்பட்டு மேன்முறையீடு செய்யாதோர் உடனடியாக செய்யுங்கள். அமைச்சு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
தகுதியான பட்டதாரிகளை மீளிணைக்க நடவடிக்கை..! நியமனம் நிராகரிக்கப்பட்டு மேன்முறையீடு செய்யாதோர் உடனடியாக செய்யுங்கள். அமைச்சு அறிவிப்பு..

வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள், மேன்முறையீடு செய்யலாம் என, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் குறித்த திட்டத்தின் கீழ், இது தொடர்பில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர், விபரம் கடந்த திங்கட்கிழமை அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் 50,000 இற்கும் மேற்பட்டோர் பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.ஆயினும், மேலும் சிலர் தொழில் வாய்ப்பை பெற்றிருந்தமை,

 ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவம் கொண்டிருந்தமை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்தமை, விண்ணப்பித்தவர் வெளிநாட்டில் இருந்தமை உள்ளிட்ட காரணங்களால், அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் மேலும் 10,000 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்க, 

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) அங்கத்துவம் பெற்றுள்ள மற்றும் தொழிலொன்றில் ஈடுபட்டு வருவதன் (Job) காரணமாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்களை, 

மேன்முறையீடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரத்னசிறி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு அமைய, தங்களது மேன்முறையீட்டினை 

தத்தமது பிரதேச செயலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஏனைய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள குறித்த மேன்முறையீட்டாளர், தகைமை ஆராயப்பட்டு, பட்டதாரி பயிலுநர் பயிற்சிக்கு அழைப்பு விடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு