மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ்.நெடுந்தீவை சேர்ந்தவர்..! பெண்ணின் சகோதரி உட்பட 2 பெண்கள் கைது, அதிர்ச்சி பின்னணி வெளியானது..

ஆசிரியர் - Editor I

மன்னார் உப்பளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரியே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சகோதரியும் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலரை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

கடந்த 13ம் திகதி மன்னார் உப்பளத்திலிருந்து பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முடியாத நிலை காணப்பட்டிருந்தபோதும் நெடுந்தீவை சேர்ந்த 21 வயதான பெண் என்பது அடையாளப்படுத்தப்பட்டது. 

கொழும்பிலிருந்து வந்த விசேட புலனாய்வு பிரிவினர் நடத்திய தொடர்ச்சியான விசாரணைகளில் பெண்ணின் சகோதரியும் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆட்டோவில் மன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும் சம்பவம் தொடர்பில் மன்னாரை சேர்ந்த மேலும் சிலர் தேடப்பட்டுவரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு