யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனா உறுதி..! பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனா உறுதி..! பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் 101 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

முல்லைத்தீவு- கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இன்று பரிசோதிக்கப்பட்டவர்கள் விபரம்..

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - ஒருவர்

* சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்

* இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 99 பேர் (ஆறுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.)

* ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு