தமிழ்தேசிய கூட்டமைப்பை விட்டு தனித்து இயங்குவதா..? பேச்சுக்கே இடமில்லை, இரா.சம்மந்தருக்கு முன்னால் சித்தார்த்தன், செல்வம் பம்மல்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பை விட்டு தனித்து இயங்குவதா..? பேச்சுக்கே இடமில்லை, இரா.சம்மந்தருக்கு முன்னால் சித்தார்த்தன், செல்வம் பம்மல்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப்போவதில்லை. என இரு கட்சிகளினதும் தலைவர்கள் கூறியுள்ளனர். 

மேற்படி விபரம் தொடர்பில் இவ்வாறு ஒரு முடிவினை ரெலோ எடுக்கவில்லை அல்லது அது தொடர்பில் இது வரையும் ஆராயவும் இல்லை. 

இதனையே என்னால் கூற முடியும். அவ்வாறு கூறப்பட்டால் எனக்கோ அல்லது எமது கட்சிக்கோ அது தொடர்பில் எந்தவொரு தொடர்பும் கிடையாது. 

நாம் கூட்டமைப்பாகவே இயங்குகின்றோம். எமக்குள் இருக்கும் விடயம் தொடர்பில் கட்சிக்குள் பேசுவோம் என செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனின் கருத்து தெரிவிக்கையில் கூட்டமைப்பை உடைக்கவோ அல்லது அதிலிருந்து வெளியேறவோ 

நாம் ஒரு போதும் எண்ணியது கிடையாது. ஆனால் தமிழ் அரசுக் கட்சி மட்டுமே சகல பொறுப்புக்களையும் வைத்திருப்பது தொடர்பிலேயே நாம் கருத்து தெரிவித்தோம். 

கருத்துக்கள் அல்லது தகவல்கள் தொடர்பில் எமக்கும் தொடர்பில்லை அது தொடர்பில் இதுவரை எங்குமே நாம் பேசவும் இல்லை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு