வடமாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி..! விரைவில் நியமனம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி..! விரைவில் நியமனம்..

வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளது.

இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழலில் , ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல்(ஓய்வு) பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் அதிகார ஆளுமை மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் குறைந்து விடாது, முழு அளவில் காணப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ குறிக்கோளுடன் செயற்படுகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு