உப்பு பாத்தியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு..! உடலில் காயங்கள் துன்புறுத்தலின் பின் கொல்லப்பட்டாரா என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
உப்பு பாத்தியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு..! உடலில் காயங்கள் துன்புறுத்தலின் பின் கொல்லப்பட்டாரா என சந்தேகம்..

உப்பு பாத்தியில் நீரில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. மன்னார் உப்பளத்திலேயே குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

உப்பு பாத்தியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், 

நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், மன்னார் நீதிவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலின் பலத்த காயங்கள் காணப்படுவதுடன் இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவரி பாதணி , உட்பட சில தடயப் பொருட்களையும், 

சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர். பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற கோணத்தில் பொலிஸார் 

விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட சடலம் சடலப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு