கொரோனா நோயாளிகள் மத்தியில் மிமிக்கிரி!! -சந்தோச படுத்தும் ரோபோ சங்கர்-

ஆசிரியர் - Editor III
கொரோனா நோயாளிகள் மத்தியில் மிமிக்கிரி!! -சந்தோச படுத்தும் ரோபோ சங்கர்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளின் மன அழுத்தத்தை நீக்கி அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை பலனளிக்க வைக்க நடிகர் ரோபோ சங்கர் மிமிக்ரி செய்து அசத்தினார்.

கொரோனாவால் பட்டுக்கோட்டை நகர பகுதிகளில் மட்டும் 300ற்க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

அங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அனுமதியின் பேரில் பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு மன அழுத்தம் போக்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், திண்டுக்கல் சங்கர் ஆகியோர் பங்கேற்று ‘மிமிக்ரி’ செய்து நோயாளிகளை மகிழ்வித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு