பாடாசாலை மாணவிகளின் சங்கிலி அறுப்பு..! அண்ணனும், தங்கையும் கைது, நகை மீட்பு..

ஆசிரியர் - Editor I
பாடாசாலை மாணவிகளின் சங்கிலி அறுப்பு..! அண்ணனும், தங்கையும் கைது, நகை மீட்பு..

பாசாலை மாணவி ஒருவரின் சங்கலியை அறுத்து சென்றவரும், அந்த சங்கிலியை வைத்திருந்தவரும் பெண்ணும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவிகளிடம் சங்கிலி அறுத்த விவகாரத்தில் தேடப்பட்டுவந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

அவர் அந்த பகுதியில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, 

அவரது சகோதரியிடமிருந்து கொள்ளையிடப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டது. இளைஞனையும், யுவதியையும் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, 

அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு