கொரோனாவில் இருந்து குணடைந்தது எவ்வாறு? -தான் உட்கொண்ட மருந்துகளை வெளியிட்ட விசால்-

ஆசிரியர் - Editor III
கொரோனாவில் இருந்து குணடைந்தது எவ்வாறு? -தான் உட்கொண்ட மருந்துகளை வெளியிட்ட விசால்-

கொரோனாவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நடிகர் விசால் ஒரு வாரத்திலேயே அதில் இருந்து முழுமையாக குணடைந்துள்ளார். 

இவ்வாறு ஒரு வாரத்தில் தான் குணமடைந்ததற்கான காரணம் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ள அவர் தான் உட்கொண்ட மருந்துக்கள் எனை எவ்பதையும் அவர் வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  உள்ளனர். அந்தவகையில் விசாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே வாரத்தில் குணமடைந்தனர். 

மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானதாக விஷால் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ள விசால், பலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அதனை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்தகங்களில் இது கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு