சமஷ்டி கேட்டால் வடக்கில் இரத்த ஆறு ஓடும்..! அரசு தருவதை வாங்கிவிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு பொத்திக் கொண்டு இருக்கவேண்டும். பிதற்றும் ஞானசார தேரர்..

ஆசிரியர் - Editor I
சமஷ்டி கேட்டால் வடக்கில் இரத்த ஆறு ஓடும்..! அரசு தருவதை வாங்கிவிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு பொத்திக் கொண்டு இருக்கவேண்டும். பிதற்றும் ஞானசார தேரர்..

தமிழ் மக்கள் சமஷ்டி தீர்வினை கேட்டால் வடகிழக்கு மாகாணங்களில் இரத்த ஆறு ஓடும் என கூறியிருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அரசு கொடுப்பதை வாங்கிக் கொண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைதியாக இருக்கவேண்டும் எனவும் கூறியிருக்கின்றார். 

.தமிழர்களுக்கு சமஷ்டி வழியில் தீர்வு வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்த அவர்கள் தனிநாடு கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும் என்றும் மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.

ராஜபக்ஷக்களின் இந்த ஆட்சிக்காலத்தில் அரசுடனும் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்றும் இது சிங்கள பௌத்த நாடு என்றும் தெரிவித்த அவர்கள், தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி சிங்கள அமைப்புக்களால்

 கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சமஷ்டி பிரிவினை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு