யாழ்.கைதடி சித்த மருத்துவ பீட மாணவியின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளும் வெளியானது..! கிளிநொச்சி வளாகம் திறப்பு இப்போதில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி சித்த மருத்துவ பீட மாணவியின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளும் வெளியானது..! கிளிநொச்சி வளாகம் திறப்பு இப்போதில்லை..

யாழ்.பல்கலைகழக சித்த மருத்துவ பீட மாணவி ஒருவர் இரு நாட்கள் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என கூறப்பட்டபோதும் தொற்று இல்லை. என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இன்று மாலை குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,
கம்பஹாவில் கொரோனா தொற்று உறுதியான இராணுவ வீரர் ஒருவரின் சகோதரி மற்றும் காய்ச்சல் அறிகுறி காரணமாக பொலனறுவையை சேர்ந்த மாணவி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படியே அவர்களுக்கு தொற்று இல்லை என்பது இன்று கிடைத்த முடிவுகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மூடப்பட்ட கிளிநொச்சி வளாகம் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பின்னரே திறக்கப்படும் என்று வளாகத்தின் பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு