யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாக மாணவியின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாக மாணவியின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தில் பரிசோதிக்கப்பட்ட மாணவியின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அச்சமடைய தேவையில்லை. குறித்த மாணவிக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹம்பகா மாவட்டத்தை சேர்ந்த கிளிநொச்சி வளாகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரனான இராணுவ சிப்பாய் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், 

பல்கலைகழக வளாகம் முடக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணவிக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு