125 பேருக்கு நேற்று பீ.சி.ஆர் பரிசோதனை..! 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
125 பேருக்கு நேற்று பீ.சி.ஆர் பரிசோதனை..! 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 125 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறிப்பாக கிளிநொச்சி- முழங்காவில் படைமுகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 2 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 5 பேர்

* பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - 5 பேர்

* பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்தல் மையம் முழங்காவில் - 79 பேர் (இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)

* வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 16 பேர்

*இலங்கை கடற்படையினர் வைத்தியசாலை காங்கேசன்துறை- 5பேர்

*மன்னர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -15பேர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு