அபிசேக்பச்சனுக்கும் கொரோனா!!

ஆசிரியர் - Editor III
அபிசேக்பச்சனுக்கும் கொரோனா!!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு அடுத்தபடியாக அவரது மகன் அபிசேபச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, நான் கொரோனா பரிசோதனை செய்தேன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், 

அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிசேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு