யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அச்சமா..? 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேருக்கு தனிமைப்படுத்தல், மன்னாரில் 14 பேர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அச்சமா..? 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேருக்கு தனிமைப்படுத்தல், மன்னாரில் 14 பேர்..

பொலனறுவை- கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ் மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதேவேளை, மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைக்கைதிகளுடன் பழகிய நபர் என்பதால், விடுதலை செய்யப்பட்டவர் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக 

வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் கூறினார். அவருடன் பழகிய 14 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு