வடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்..! முக கவசம் அணியாதோருக்கு 14 கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை. பணிப்பாளர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்..! முக கவசம் அணியாதோருக்கு 14 கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை. பணிப்பாளர் எச்சரிக்கை..

இலங்கையில் கொரோனா அபாயம் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முக கவசம் அணியாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். 

மேற்கண்டவாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது, 

நமது நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குவெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் 1 மீற்றர் இடைவெளியை பேணுவதும்,

சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவதும் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது நமது நாட்டில் மக்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும்போதும்,

பொது இடங்கள் மற்றும் பொதுநிகழ்வுகளுக்கு வருகை தரும் பொழுதும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகக் கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்

14 நாட்கள் கட்டாய  உட்படுத்தப்படுவார்களென ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பினும் வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக்கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இனிவரும் நாட்களில்மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மக்கள் பொது இடங்களில் நடமாடும்போது கட்டாயமாக முககவசம் அணிவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தங்களையும்

தங்கள் சமூகத்தினையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என கூறப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு