மன்னார் தேவாலயத்திற்குள் நடமாடி பீதியை ஏற்படுத்தியிருந்த நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I
மன்னார் தேவாலயத்திற்குள் நடமாடி பீதியை ஏற்படுத்தியிருந்த நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டார்..!

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய அதே நபரே இன்று யாழ் பெரிய கோவிலிலும் நடமாடித்திரிந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்திற்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் வந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மிக நீண்ட நேரம் தனது உடமைகளுடன் நடமாடித்திரிந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்து தற்போது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு