சிறுவர் இல்லத்தில் மாணவி சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Admin
சிறுவர் இல்லத்தில் மாணவி சடலமாக மீட்பு..!

வவுனியா மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் துாக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் இல்லத்தினால் இன்று (05.07.2020) மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் 

இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். இதன்போது விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ராஜி செல்வராணி என்ற 17 வயது மாணவியே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்று வருவதுடன்,

இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது இவர் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக குறித்த இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு