ஆண் மகன் என்றால் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு கருணாவுக்கு செல்வம் சவால்!

ஆசிரியர் - Admin
ஆண் மகன் என்றால் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு கருணாவுக்கு செல்வம் சவால்!

உண்மையிலேயே கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்துள்ளார்.

வடக்கு-கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வதாக தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்றதைப் போன்றே அவர்களின் வார்த்தைகள், செயற்பாடுகள் அமைந்து உள்ளது.

சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும் .

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மதுபான சாலைகள் வைத்திருப்பதாகவும் கருணா மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். உண்மையிலேயே அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அவர் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு