தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகள், ஆதரவாளர்களை தீவிரமாக கண்காணிக்கிறோம்..! அவர்கள் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்க முயற்சிக்கிறார்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகள், ஆதரவாளர்களை தீவிரமாக கண்காணிக்கிறோம்..! அவர்கள் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்க முயற்சிக்கிறார்கள்..

தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, அவர்கள் தொடர்பில் மிக அவதானமாக இருக்கிறோம். இருக்கவேண்டியிருக்கிறது. எனவும் கூறியுள்ளார். 

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து துடைத்தெறிந்துள்ளோம்.  ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இன்னமும் செயற்படுகின்றனர். 

வெளிநாடுகளில் நிதிசேகரிப்பில் ஈடுபடுகின்றனர். என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டு அவர்கள் இதனை தொடர விரும்புகின்றனர், அவர்கள் விடுதலைப்புலிகளிற்கு ஒக்சிசனை வழங்கமுயல்கின்றனர். 

அது நாட்டிற்கு வெளியே இடம்பெறலாம் என தெரிவித்துள்ள சவேந்திரசி;ல்வா அவர்கள் இலங்கையில் சிலரை தமது செல்வாக்கிற்கு உட்படுத்த முயல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.எனினும் கடந்த பத்து வருடங்களில் நாங்கள் இதனை முறியடித்துள்ளோம், 

நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பாதுகாப்பு நிலை குறித்து ஒவ்வொரு வாரமும் தேசிய பாதுகாப்பு சபையுடன் கலந்தாலோசிக்கின்றார்எனவும், தெரிவித்துள்ள இராணுவதளபதி 

நாங்கள் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலிற்காக அறிகுறிகள் எதனையும் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனினும் வித்தியாசமான தீவிரவாதமொன்று வேறு ஒரு திட்டத்தை வகுக்கலாம்,ஆனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம், 

எங்களின் புலனாய்வு உச்சநிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு