மன்னார் மடுமாதா ஆடித் திருவிழாவில் 1000 பேருக்கே அனுமதி!

ஆசிரியர் - Admin
மன்னார் மடுமாதா ஆடித் திருவிழாவில் 1000 பேருக்கே அனுமதி!

மன்னார் மடுமாதா ஆலயத்தின் ஆடிமாத திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வருடந்தோறும் அரச அனுசரணையுடன் நடைபெறும் மடுமாதா ஆலயத்தின் ஆடிமாத பெருவிழா ஆயத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று மன்னார் மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

“மருதமடு மாதாவின் ஆடிமாத திருவிழா திருப்பலி எதிர்வரும், ஜூலை 2ஆம் திகதி காலை 6.15 மணிக்கு நடைபெறும். திருவிழா நாளன்று நடைபெறும் திருவிழா மற்றும் திருப்பலிக்கு பக்தர்கள் வந்து செல்லலாம்.

ஆனால் கொரானா அச்சுறுத்தல் காரணமாக ஒரு திருப்பலியில் ஆயிரம் பேர் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் ஆயிரம் பேருக்கு மேல் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படமாட்டாது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.30 மணி, 10.30 மணி என வெவ்வேறு நேரங்களில் திருப்பலிகள் நடத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆலயம் வரும் பக்தர்கள் அரசு மக்களுக்கு தெரிவித்திருக்கும் அறிவுரைகளுக்கு அமைவாக சுகாதார அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

திருப்பலியில் கலந்து கொள்ள முடியாத பக்தர்களின் நலன் கருதி ரூபாவாஹினி தொலைக்காட்சியூடாக திருப்பலி நிகழ்வு ஒளிபரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு