மிகமோசமான இராணுவ ஆட்சியை சந்திக்கப்போகிறோம்..! சுமந்திரன் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
மிகமோசமான இராணுவ ஆட்சியை சந்திக்கப்போகிறோம்..! சுமந்திரன் எச்சரிக்கை..

நாங்கள் எப்போதும் கண்டிராத அளவுக்கு ஒரு இராணுவ ஆட்சி உருவாகப்போகிறது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

உடுப்பிட்டி மற்றும் பருத்தித்துறை தொகுதி செயற்பாட்டாளருக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மாற்று அணி என தம்மை தெரிவிப்பவர்கள் குறைந்தது 5 ஆசனங்களையாவது பெற முடியுமா எனவும் அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள். 

நாங்கள் ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்று முழுமையாக உழைத்தோம். அது ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சிங்கள மக்களுக்கு 

எமது நியாய பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயம் தானே என சிங்கள மக்கள் உணரும் அளவிற்க்கு தலைவர் சம்மந்தர் ஐயா எதிர்கட்சி தலைவராக இருக்கின்ற காலத்தில் செயற்ட்டார். 

ஆயுதம் ஏந்தப் போராடாத நான் அதனை சொல்லி வாக்கை பெறுவது அவர்களது தியாகத்தையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் மக்களுக்கு தீர்வு வேண்டும் என்றால் இங்கே பேசுவதை சிங்கள மக்கள் மத்தியிலும் பேச வேண்டும். 

என அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 3:30 வடமராட்சி நெல்லியடி மலிசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் 

மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலமையில் இடம் பெற்றது. இதில் தமிழரசு கட்சி வெட்பாளர்களான திருமதி ரவிராஜ் ,சி.சிறிதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், மாவை சேனாதிராசா, இமானுவேல் ஆனோல்ட், ஏ,சுமந்திரன் ஆகியோரும் 

பருத்தித்துறை , உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் ச.அரியகுமார், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் திரு ஐங்கரன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராசா என 

சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். இதில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, எம் ஏ சுமந்திரன், த.தபேந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், இ.ஆனோல்ட், திருமதி சசிகலா ரவிராஜ், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு