படையினரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி..! நடந்தது என்ன? ஏன்? எப்படி? மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
படையினரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி..! நடந்தது என்ன? ஏன்? எப்படி? மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு..

யாழ்.கிளாலி பகுதியில் நேற்று படையினர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை நடாத்தி அறிக்கை சமர்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.சாள்ஸ் அம்மையார் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்ததாவது, முகமாலை காரைக்காடு குளப்பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட அதனோடொட்டியதாக நிகழ்ந்த விடயங்கள் தொடர்பாக 

அதிக கரிசனை கொண்டிருக்கின்றேன். அச்சம்பவம் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.இந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட 

விடயங்கள் தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.அச்சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணையை முன்னெடுத்து முழுமையான அறிக்கையொன்றை அளிக்குமாறும் கோரியுள்ளேன். 

அத்துடன் வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அமைதியை சீர்க்குலையக்கூடாது என்பதையும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு