யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

ஆசிரியர் - Admin
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நிராகரித்துள்ளார்.

கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளார் என்று ஊகங்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்து வெளியிடுகையில், இராணுவ அதிகாரி ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு