வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, குரும்பசிட்டி, வசாவிளான் செல்வநாயகபுரம், பலாலி கிழக்கு, பலாலி சென்ஜேம்ஸ் சந்தி, பலாலி மருதடிச் சந்தி, வகையடி, அச்செழு, திண்ணை சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, அம்பலவாணர் வீதி, சபாபதிப்பிள்ளை வீதி, மருதனார்மடம் சந்தியிலிருந்து இணுவில் புகையிரத நிலையம் வரை, மருதனார்மடம்- யாழ். நுண்கலைப் பீடம், அராலிப் பிரதேசம், செட்டியார்மடச் சந்தி, கரம்பிட்டிப் பிள்ளையார் கோவிலடி, அராலி ஐயனார் கோவிலடி, அராலி கொலனி, அராலி சரஸ்வதி பாடசாலை, குட்டியப்புலம், நிலாவரை, நவக்கிரி, சிறுப்பிட்டி, புத்தூர், ஊறணி, வீரவாணி, ஆவரங்கால், வாதரவத்தை, பெரிய பொக்கணை, ஈவினை, அச்சுவேலி, அச்சுவேலி தோப்பு, அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை, கதிரிப்பாய், தம்பாலை, இடைக்காடு, வளலாய், கல்வியங்காடு GPS மைதானப் பிரதேசம், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலி பால்சபை பிரதேசம், இராஜ வீதி, கோப்பாய் காவல் நிலையம், Organic பண்ணை, Sarah Industries (Pvt) Ltd, Industrial Development Estate, Ever Shine Amana Roofing Union Enterprise, Mascons Company Lane, வெங்கடேஸ்வரா ரேடிங் பிறைவேற் லிமிற்ரெட், Noble Int Papers lanka(Pvt) Ltd, விக்கிரமரட்ண பிறைவேற் லிமிற்ரெட் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு