சனி, ஞாயிறில் 12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்பு!

ஆசிரியர் - Admin
சனி, ஞாயிறில் 12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்பு!

12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்புகளை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார வழிமுறைகளுக்கமை மாதிரி வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தேர்தல் ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு