ஆசிய மட்டத்தில் முதலிடம்: மாணவியின் சாதனைக்கு வடமாகாண முத­ல­மைச்சர் புக­ழாரம்

ஆசிரியர் - Admin
ஆசிய மட்டத்தில் முதலிடம்: மாணவியின் சாதனைக்கு வடமாகாண முத­ல­மைச்சர் புக­ழாரம்

ஆசிய பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான பளு­தூக்கும் போட்­டியில் முத­லி­டத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவி தர்­சிகா நக­ரங்­க­ளி­லி­ருந்து வெகு­தொ­லை­வி­லுள்ள பாண்­டி­யன்­குளம் கிரா­மத்­தி­லி­ருந்து சென்று சாதனை படைத்­துள்ளார் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் ஆசிய பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான பளு­தூக்கும் போட்­டியில் முல்­லைத்­தீவு பாண்­டி­யன்­குளம் மகா வித்­தி­யா­லய மாணவி தேவ­ராசா தர்­சிகா 48 கிலோ­கிராம் பளு­தூக்கும் பிரிவில் முத­லி­டத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

இதனை முன்­னிட்டு மாணவிக்கான கௌர­விப்பு நிகழ்வில்

பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட முத­ல­மைச்சர் மேலும் கூறு­கையில், நக­ரங்­க­ளி­லி­ருந்து மிக நீண்­ட­தூ­ரத்தில் உள்ள போதிய வச­திகள் இல்­லாத பாண்­டி­யன்­குளம் கிரா­மத்தில் இருந்து அய­ராத உழைப்பின் மூலம் ஆசிய மட்­டத்தில் நடை­பெற்ற பளு­தூக்கும் போட்­டியில் தர்­சிகா சாத­னை­ ப­டைத்­துள்ளமையானது, பாண்­டி­யன்­குளம் குறித்த பாடசாலையில் கல்வி கற்­பித்து வரு­கின்ற உடற்­கல்வி ஆசி­ரியர் பத்­ம­நாதன் பிர­தீபனின் உழைப்பின் உன்­ன­தமேயென பாராட்­டினார்,

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு