பட வாய்ப்பு இல்லை!! -தெருவில் பழம் விற்கும் நடிகர்-

ஆசிரியர் - Editor III
பட வாய்ப்பு இல்லை!! -தெருவில் பழம் விற்கும் நடிகர்-

கொரோனா வைரஸ் தொற்றால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகர் தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 ஆம் திகதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு