கிளிநொச்சி- முகமாலை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கிகளுடன் எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- முகமாலை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடை, துப்பாக்கிகளுடன் எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது..!

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளின்போது தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளுடன் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த பகுதியில் கண்ணிவெடியற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களால் குறித்த எலும்பு எச்சங்கள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். குறித்த எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி முகமாலை போர் பிரதேசத்தின் முன்னரங்க பகுதி என கூறப்படுகின்றது. 

மேலும் மேலும் எலும்பு எச்சங்களுடன் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு