மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..! யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை..

ஆசிரியர் - Editor I
மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..! யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை..

திருகோணமலையிலிருந்து 670 கிலோ மீற்றர் துாரத்தில் வங்களா விரிகுடாவில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக விரிவடையவுள்ளது. 

10 மாவட்டங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேலும் காற்றின் வேகம் 40 தொடக்கம் 50 கி.மீ வரை அதிகரிக்கும் எனவும் இடியுடன் கூடிய மழை காலத்தில் 60 தொடக்கம் 70 கி.மீ வரை அதிகரிக்கும். 

மேலும் 18ம் திகதி தொடக்கம் 20ம் திகதிவரை சூறாவளி கரையை கடக்கவுள்ள நிலையில் இந்த நாட்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளதுடன், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும்

வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு