யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று திரும்பிய 5 பேருக்கு மீண்டும் கொரோனா..! பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 5 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

இவர்கள் அனைவரும் யாழ்.அரியாலை பகுதியை சேர்ந்தவர்களாவர். கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீடு திரும்பியிருந்த நிலையிலேயே இவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளனது. 

ஆகவே இவர்கள் 5 பேரும் தமது வீடுகளிலேயே 2 வாரம் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். மேலும் 2 வாரங்களின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு