பயன்படுத்தப்படாமல் உள்ள மக்களின் காணிகள், திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் விபரங்களை கேட்கிறது இராணுவம்..!

ஆசிரியர் - Editor I
பயன்படுத்தப்படாமல் உள்ள மக்களின் காணிகள், திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் விபரங்களை கேட்கிறது இராணுவம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிர் செய்யப்படாத மக்களுடைய காணிகள், திணைக்களங்களின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்களை தமக்கு தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திடம் படையினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வண்ணம் தரிசா இருக்கும் நிலங்கள் முழுவதனையும் செய்கைக்கு உட்படுத்த வேண்டும் என கடந்த மாதம் ஜனாதிபதி செயலணியில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது முல்லைத்தீவில் படையினர் குறித்த விபரத்தினை கோரியுள்ளனர்.

குறித்த விபரத்தினை சமர்ப்பிக்குமாறு படையினர் கோரியிருப்பது தொடர்பில் மாவட்டச் செயலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , மேற்படி தரவினை படையினர் கோரியிருப்பதனை உறுதி செய்த்தோடு இதில் தனியார் செய்கை மேற்கொள்ளாத நில விபரம் கைவசம் இல்லாததோடு 

அதனை உடன் திரட்டும் சாத்தியமும் கிடையாது. அதேநேரம் தனியாருக்கு வழங்கிய நிலையிலும் திணைக்களங்களின் பிடியில் உள்ள நில விபரங்கள் உடன் சேகரிக்க முடியும் அதனையே வழங்க முடியும். எனப் பதிலளித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு