இருபதுக்கு இருபது மூன்றாவது தொடரிலும் வெற்றிக்கான நம்பிக்கையில் இலங்கை

ஆசிரியர் - Admin
இருபதுக்கு இருபது மூன்றாவது தொடரிலும் வெற்றிக்கான நம்பிக்கையில் இலங்கை

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் பெரும் பின்­ன­டைவை எதிர்­கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, இவ் வருட ஆரம்­பத்தில் இரண்டு வெற்­றி­க­ளுடன் புத்­தெ­ழுச்சி பெற்­றுள்ள அணி­யாக முன்­னேற்றம் அடைந்­துள்­ளது.பங்­க­ளா­தேஷில் கடந்த மாதம் நடை­பெற்ற மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சம்­பி­ய­னான இலங்கை, அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற பங்­க­ளா­தே­ஷு­டனான டெஸ்ட் தொடரை 1–0 எனக் கைப்­பற்­றி­யது.

இந்த இரண்டு வெற்­றி­களைத் தொடர்ந்து இரண்டு போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்­டியில் பங்­க­ளா­தேஷை இலங்கை இன்று எதிர்­கொள்­ள­வுள்­ளது. இந்தப் போட்டி டாக்­காவில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே இரு­வகை தொடர்­களில் வெற்­றி­யீட்­டிய இலங்கை மூன்­றா­வது வகை­யான சர்­வ­தேச இரு­பது 20 தொட­ரிலும் வெற்­றி­பெ­ற­மு­டியும் என்ற நம்­பிக்­கையில் இலங்கை அணி திகழ்­கின்­றது.
மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்­க­ளுக்­கான வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தை­யி­லி­ருந்து மீளாத நிலையில் அவ­ருக்குப் பதி­லாக தினேஷ் சந்­திமால் இந்தத் தொடரில் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இதே­போன்று பங்­க­ளா­தேஷின் வழ­மை­யான அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் உபா­தை­யி­லி­ருந்து மீளா­ததால் மஹ்­மு­துல்லாஹ் பதில் தலை­வ­ராக அணியை வழி­ந­டத்­த­வுள்ளார்.
மும்­முனைத் தொடரின் இறுதிப் போட்­டியில் அறி­முக வீர­ராக ஹெட் ட்ரிக் முறையில் விக்­கெட்­களைக் கைப்­பற்­றிய வேகப்­பந்­து­வீச்­சாளர் ஷெஹான் மது­ஷன்­கவும் இலங்கை குழாத்தில் இடம்­பெ­று­கின்றார். இவர் பெரும்­பாலும் சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­யிலும் அறி­மு­க­மாவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் இ20 குழாத்தில் ஐந்து வரு­டங்­களின் பின்னர் மீண்டும் இடம்­பெறும் சிரேஷ்ட வீரரும் சக­ல­துறை வீர­ரு­மான ஜீவன் மெண்டிஸ் இன்­றைய போட்­டியில் விளை­யா­டி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

இது இவ்­வா­றி­ருக்க உபா­தை­யி­லி­ருந்து பூரண குண­ம­டை­யாத அதி­ரடி வீரர் குசல் ஜனித் பெரே­ரா­வுக்குப் பதி­லாக குழாத்தில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள குசல் மெண்டிஸ் அணியில் இடம்­பெற்றால் பெரும்­பாலும் பின்­வ­ரி­சையில் துடுப்­பெ­டுத்­தாட வேண்டி வரலாம்.
இலங்கை துடுப்­பாட்ட வரி­சையில் தனுஷ்க குண­தி­லக்க, உப்புல் தரங்க, நிரோஷன் திக்­வெல்ல, தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), அசேல குண­ரட்ன, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், தசுன் ஷானக்க, அக்­கில தனஞ்­சய, ஷெஹான் மது­ஷன்க, இசுறு உதான ஆகியோர் இடம்­பெ­றலாம் என கரு­தப்­ப­டு­கின்­றது.

பங்­க­ளாதேஷ் குழாம்
மஹ்­மு­துல்லாஹ்(அணித் தலைவர்), தமிம் இக்பால், நஸ்முல் இஸ்லாம், அபு ஹைதர், அபு ஜயெத், அபிப் ஹொசெய்ன், ஆரிப்உல் ஹக், மெஹெதி ஹசன், மொஹமத் சய்புதின், முஷ்பிக்குர் ரஹிம், முஷ்தாபிஸுர் ரஹ்மான், ருபெல் ஹொசெய்ன், சபிர் ரஹ்மான், சௌம்யா சர்க்கார், ஸக்கிர் ஹசன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு