இன விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை செய்த விடுதலை புலிகள் தொடர்பில் தவறாக பேசுவதா..? சுமந்திரனை பதவி நீக்குங்கள்..

ஆசிரியர் - Editor I
இன விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை செய்த விடுதலை புலிகள் தொடர்பில் தவறாக பேசுவதா..? சுமந்திரனை பதவி நீக்குங்கள்..

தமிழரின் இன விடுதலைக்காக அதியுச்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தொடர்ந்தும் கருத்து கூறிவருகின்றார். 

இவ்வாறான கருத்துக்களை கூறவேண்டாம் என கூறியும் தொடர்ச்சியாக விடுதலை புலிகளுக்கு எதிராக பேசிவருகின்றார். அவருடைய இந்த செயற்பாட்டை கண்டிப்பதுடன், அவரை பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கவேண்டும். 

மேற்கண்டவாறு வலியுறுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். 

விடுதலை புலிகளுக்கு எதிராக பேசவேண்டாம் என கூறியும் தொடர்ச்சியாக பேசிவருகின்றார். அவர் கட்சியின் பேச்சாளர் அந்தஸ்த்தில் இருந்து கொண்டு பேசுவதால் மக்கள் மிகுந்த கோபமடைந்துள்ளனர். 

அவர் தனது இந்த நடவடிக்கையை நிறுத்துவதுடன், அவரை கட்சியின் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கி பொருத்தமான மற்றொருவரை அதற்கு நியமிக்கவேண்டும் என நிர்மலநாதன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு