ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..! 4 அபாய வலயங்களில், 2 வலயங்களில் மட்டும் ஊரடங்கு தளர்கிறது..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..! 4 அபாய வலயங்களில், 2 வலயங்களில் மட்டும் ஊரடங்கு தளர்கிறது..

இலங்கையில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொழும்பு ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. 

கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு, ஹம்பகா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும், 

புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் உள்ளடங்கலாக 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கின்றது. 

மேலும் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை இரவு 8 மணிக்கு மீள அமுலாகும். இவ்வாறே தினசரி 9 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு