யார் என்றே தொியாத ஒருவரைக் கேட்டு பொதுமக்கள் மீது பொலிஸார் மிருகத்தனமான தாக்குதல்..! 3 பேர் படுகாயம், முறைப்பாடு ஏற்கவும் மறுப்பு..

ஆசிரியர் - Editor I
யார் என்றே தொியாத ஒருவரைக் கேட்டு பொதுமக்கள் மீது பொலிஸார் மிருகத்தனமான தாக்குதல்..! 3 பேர் படுகாயம், முறைப்பாடு ஏற்கவும் மறுப்பு..

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்கள் மீது பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

தாக்குதலுக்குள்ளான நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்ய முல்லைத்தீவு பொலிசார் மறுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர், ஒரு நபருடைய பெயரைக் கேட்டு அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டு வந்து உடனடியாக ஒப்படைக்குமாறு கோரியே 

மூன்று நபர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர்கள் 1990 நோயாளர் காவு வண்டி மூலமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காரணம் இன்றி இரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து இவ்வாறான தாக்குதல் நடத்துவதன் பின்னணியில், குறித்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதுடன் குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் 

குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு