முல்லைத்தீவு பெண் கண்டுபிடித்த மூலிகை மருந்து..! கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துமா..?

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு பெண் கண்டுபிடித்த மூலிகை மருந்து..! கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துமா..?

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண் ஒருவர் மூலிகை மருந்து ஒன்றை தயாரித்துள்ளார், இந்நிலையில் குறித்த மூலிகை மருந்து கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் என பேச்சுக்கள் எழுந்துள்ளது. 

உலகளாவியரீதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மருந்து தயாரிப்பு பணியில் பல விஞ்ஞானிகள், நாடுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கிருஸ்ணதாஸ் சாயிணி என்ற பெண் இந்த மருந்தை தயாரித்துள்ளார். 

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட செயலர் தலமையிலான குழுவினர் நோில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மருந்து தொடர்பாக கேட்டறிந்துள்ளனர். அதேபோல் குறித்த மருந்துக்கு அரச அங்கீகாரம் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர். 

எனினும் குறித்த மூலிகை மருந்து இதுவதை விஞ்ஞானரீதியாக கொரோனா தொற்றை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு