யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நள்ளிரவில் இராணுவம் அடாவடி..! வீடு புகுந்து அச்சுறுத்தல், தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நள்ளிரவில் இராணுவம் அடாவடி..! வீடு புகுந்து அச்சுறுத்தல், தாக்குதல்..

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், சிலர் மீது தாக்குதல் நடாத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

கடந்த தை பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனை தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 

எனினும் தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை படையினர் தொடர்ச்சியாக தேடிவரும் நிலையில், பொலிஸார் நீதிமன்றில் அவ்வாறு ஒரு இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவனை தேடவில்லை. 

என கூறியிருக்கின்றனர். நிலை இவ்வாறிருக்க நேற்று நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்துள்ளனர். எனினும் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் விட்டில் இருந்தவர்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன், தாக்குதலும் நடாத்தியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். 

தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் தர்க்கம் நடைபெற்றிருந்தபோது அதில் முன்னின்ற இளைஞன் ஒருவனை இராணுவம் தீவிரமாக தேடிவருகின்றது. எனினும் அவனை இதுவரை கைது செய்ய முடியாத நிலையில் பல தடவைகள் அவருடைய குடும்பத்தார் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளனர். 

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றால், நீதிமன்றில் அவ்வாறு ஒரு நபரே இல்லை, நாங்கள் தேடவும் இல்லை என கூறிய பொலிஸார், காரணமே இல்லாமல் குறித்த இளைஞனை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்பதாகவும், 

முறைப்பாட்டை பெற பின்னடிப்பதாகவும் குடும்பத்தினர்  கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு