யாழ்.மாவட்டத்தின் இன்றைய நிலமை என்ன? வடக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 68 பேர் உள்ளடங்கலாக, 83 பேருக்கு பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் இன்றைய நிலமை என்ன? வடக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 68 பேர் உள்ளடங்கலாக, 83 பேருக்கு பரிசோதனை..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.மருத்துவபீடத்தில் நடாத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

இதன்படி இன்று 83 பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்,

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.

* பொது வைத்தியசாலை வவுனியா - 2 பேர்.

* இரணைமடு தனிமைப்படுத்தல் மையம் - 58 பேர்.

* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு நல்லூர் - 10 பேர்.

* பாதுகாப்பு படை ஆதார வைத்தியசாலை கிளிநொச்சி - 8 பேர்

* இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையம் - 2 பேர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு