21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்கு..! 11ம் திகதியுடன் நிறைவுக்கு வரலாம்..

ஆசிரியர் - Editor I
21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்கு..! 11ம் திகதியுடன் நிறைவுக்கு வரலாம்..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்ந்த 21 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் மீண்டும் 11ம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவிருக்கின்றது. 

4 மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில், 21 மாவட்டங்களிலும் இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு அமுலாகும். 

அபாய வலயங்களான 4 மாவட்டங்களிலும் எதிர்வரும் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படா விட்டாலும், இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

இதேவேளை, அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் நடமாடும் நடைமுறை, எதிர்வரும் 11ஆம் திகதி முதலே ஆரம்பிக்கவுள்ளது. 

ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே இந்த நடைமுறை அமுலில் இருக்கும். ஏனைய பகுதிகளில் இந்த நடைமுறை அமுலில் இருக்காது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு