யாழ்.மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கை 2 நாட்களுக்கு நிறுத்தம்..! பெண் விரிவுரையாளரும், கணவரும் காரணமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கை 2 நாட்களுக்கு நிறுத்தம்..! பெண் விரிவுரையாளரும், கணவரும் காரணமாம்..

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பல்கலைகழக விரிவுரையாளர் மற்றும் அவருடைய கணவரின் விசமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளாலேயே பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனைகள் இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த பரிசோதனை நடவடிக்கைள் தொடர்பாக பெண் விரிவுரையாளரும் அவருடைய கணவரும் பல்கலைகழகத்திற்குள்ளும், சமூக மட்டத்திலும் விசமனத்தனமான பிரச்சா ரங்கள் மேற்கொண்டிருக்கின்றனர். 

இதனால் எழுந்துள்ள குழப்பமான நிலையை கருத்தில் கொண்டு இரு நாட்களுக்கு கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக யாழ்.பல்கலைகழக மருத்துவபீட தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு