மக்களுக்கு ஆறுதலளித்திருக்கும் ஜனாதிபதியின் தீர்மானம்..! மீண்டும் 5000 ரூபாய்..

ஆசிரியர் - Editor I
மக்களுக்கு ஆறுதலளித்திருக்கும் ஜனாதிபதியின் தீர்மானம்..! மீண்டும் 5000 ரூபாய்..

ஊரடங்கு சட்டம் மற்றும் கொரோனா அபாயத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயி ரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது. 

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தற்போதைய நிலைமை கருதி மீண்டும் இன்று முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட இந்தக் கொடுப்பனவின் 

2 ஆம் கட்டம் இதன்படி இன்றைய தினம் முதல் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் 

இன்று முதல் ஆரம்பமாவதுடன், வெசக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் வழங்கி முடிக்கப்படும். வயோதிபர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக 

மார்ச் மாதம் முதல் நபர் ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் வீதம் வழங்குவதற்கு ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவினருக்கான மூல ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப் போன்றே 

காத்திருப்பவர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் கொடுப்பனவுகள் உரித்தாகும்.மே மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குதல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி

 பௌர்ணமி தினத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு