கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை வடக்கு மாகாணத்தில் மிக விரைவில் நிறுவப்படும்..! சகல நடவடிக்கைகளும் பூர்த்தி..

ஆசிரியர் - Editor I
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை வடக்கு மாகாணத்தில் மிக விரைவில் நிறுவப்படும்..! சகல நடவடிக்கைகளும் பூர்த்தி..

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்று வடக்கு மாகாணத்தில் நிறுவப்படவுள்ளதாக கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வடக்கு மாகாணத்தில் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர் களை இதுவரை நாங்கள் வெலிகந்த மற்றும் இரணவில போன்ற வைத்தியசாலைகளுக்கே அனுப்பிவருகின்றோம். இந்நிலையில் வடமாகாணத்தில் குறித்த வைத்தியசாலையை அமைக்க

மாகாண சுகாதார அமைச்சு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. இதன்படி வடக்கில் உள்ள ஒரு வைத்தியசாலையை தேர்வு செய்து அதனை கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு