யாழ்.மாவட்டத்தில் தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களின் கவனத்திற்கு..! சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களின் கவனத்திற்கு..! சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப அனுமதி..

யாழ்.மாவட்டத்தில் தங்கியிருக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கான சிபார்சு வழங்கப்படுவதாக யாழ்.மாவட்ட செயலகம் அறிவித்திருக்கின்றது. 

இது குறித்து யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் தங்கியிருக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி அனுப்புவதற்கான சிபார்சு வழங்கப்படுகின்றது. 

மாவட்ட செயலகம் ஊடாக சிபார்சு வழங்கப்படுபவர்களின் பட்டியல் ஆனையிறவு மற்றும் கேரதீவு பகுதிகளில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு பட்டியல் பார்க்கப்பட்டு, வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். 

இ.போ.ச மற்றும் தனியார் வாகனங்கள் மாகாணத்திற்குள் பயணிக்கலாம். குறிப்பாக தனியார் வாகனங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதி பெறவேண்டும். 

மேலும் வடமாகாணத்திற்குள் பயணிப்பதற்கு கட்டுப்பாடுகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படாது. ஆனால் மாகாணத்திற்கு வெளியே பயணிப்பதற்கு கட்டாயம் கட்டுப்பாடுகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும். என மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு