கடுமையான நிபந்தனைகளுடன் சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..! மீறினால் கடும் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
கடுமையான நிபந்தனைகளுடன் சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..! மீறினால் கடும் நடவடிக்கை..

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மதுவரி திணைக்கள உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உரிய சு காதார நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைசின் செயலாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கோவிட் -19 நோயைத் தடுப்பதற்கான பிற பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்குவதற்கான நிபந்தனைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு, சமூக கட்டுப்பாடுகள் உள்பட்டு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறும் மதுவரி உரிமம் பெற்ற இடங்கள் தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும், மதுபானத் தொழில் தொடர்பாக அதிகபட்ச அளவிலான தொழில் ஒழுக்கத்தைப் பேணவும் அனைத்து மதிவரி அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு